Skip to main content

Posts

Showing posts from November, 2014

NEW AND UPDATED

CPS ACCOUNT SLIP - PUBLISHED ONLINE - JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH: ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு: 10TH 12TH ALL SUBJECTS SLOW LEARNERS GUIDE AND MINIMUM PASS IDEAS-2014: NEW TET SELECTED TEACHERS FORMS CORNER: SSLC SCIENCE ONE MARK ANALYSIS-ALL PUBLIC ONE MARKS LIST OUT ONE PAGE-CLICK HERE TNPSC OLD QUESTION PAPERS WITH ANSWER: TNTET PREVIOUS YEAR QUESTION PAPERS WITH ANSWER: Click here -ALM Lesson plan-Science and Maths.. தஅஉச - உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்: தனியார் பள்ளியில் எந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன அரசுப் பள்ளியில் நல்ல மனிதர்கள் உருவாக்கப்படுகிறனர்-ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் மனக்குமுறல் ! தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை -INCENTIVE மற்றும் INCREMENT பெறுவதற்கான-அரசாணை - G.O: கவனத்திற்குள் வராத கணிதத் தேர்வும்-ஒட்டு மொத்த கணித ஆசிரியர்களின் ஆதங்கமும்: பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2014 விடைகுறிப்புகள்

விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி-ஊரக தொழில்த்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆச்சியர் பங்கேற்பு:

View the slide show 15.11.2014 அன்று கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்துகொண்ட அறிவியல் கண்காட்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் ஊரக மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.ப.மோகன் அவர்கள், மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.வி.சம்பத் IAS அவர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு.டாக்டர்.காமராஜ் அவர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி அழகுவேல் பாபு அவர்கள்  கலந்துகொண்டு மாணவர்களின்  படைப்புகளை கண்டுகளித்து சிறந்த படைப்புகளை தேர்வுசெய்து பரிசளித்தனர்.இதில் முதல் நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் கலந்துக்கொள்ள தகுதியுடையவர் ஆவார்கள்.மேலும்  மாவட்ட கல்வி அலுவலர்கள் திருமதி.கோ.தனமணி,திரு.ந.பாஸ்கரன் ,திரு.எஸ்.மாதவன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இது போன்ற நிகழ்வுகள் அரசுப்பள்ளிகளில்  அரசால் நடத்தப்படும்போது மாணவர்களின் அறிவியல் திறமை கண்டிப்பாக வெளிப்படும் என்பதில் சந்தேகம் இல்லை..என

20 சிறுவர்களுக்கு தேசிய விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்:

பிறரின் உயிரை காப்பாற்றிய 7 சிறுவர், சிறுமிகளுக்கு வீர விருது!!!

ஆபத்தான சூழ்நிலையில், புத்திசாலித்தனமாக நடந்து, தன் உயிரை பணயம் வைத்து, மற்றவரின் உயிரை காப்பாற்றிய, ஏழு சிறுவர்கள், இரண்டு சிறுமியருக்கு, மாநில அரசு வழங்கும், வீர விருது வழங்கப்படுகிறது குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர், உமாஸ்ரீ கூறியதாவது: நாயிடமிருந்து தப்பிக்கும் போது, கால் இடறி, 25 அடி ஆழ் கிணற்றில் விழுந்த, 5 வயது சிறுவன் சைஜனை காப்பாற்றிய, ரிப்பன்பேட்டை கவடூரு கிராமத்தின் தீக் ஷித்; பள்ளிச்சுற்றுலாவின் போது, குளத்தில் மூழ்கிய இரு மாணவர்களை காப்பாற்றிய, மதுகிரியின் கிஷன் ஆகியோருக்கு, இம்முறை, ’ஹொய்சாலா விருது’ வழங்கப்படுகிறது. குழந்தைகளுடன் தற்கொலை முயற்சியில், தாய் இறந்து விட்டாலும், மன உறுதியை கைவிடாமல், தன், 8 மாத தம்பியை தூக்கிக் கொண்டு, இரவு வேளையில், அபாயமான கிருஷ்ணா நதி ரயில்வே பாலத்தை தாண்டி வந்த, முத்தோலின் சுமித்குமார் சிந்தகி; மலையேறும் சாகசத்தில் ஈடுபட்டபோது, வழுக்கி விழுந்த நண்பனை காப்பாற்றிய அனூப், ஸ்வரூப்; கல்லால் சிறுத்தையை அடித்து விரட்டி, இருவரை காப்பாற்றிய குண்டுலுபேட்டை தாலுகா குந்தகெரேயை சேர்ந்த அப்பு; வாகன விபத்தில், சிக்கிக் கொண்ட

அவசர ,அவசியத்திற்கு தேவையான எண்கள்:

நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய, அவசிய தொடர்பு எண்கள்.பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்துவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற  புகார்களுக்கு : 93833 37639 பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு  Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828 மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க——–044 – 26530504 / 26530599 வாடகைத் தாய்களாகப் போய்,புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424 ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட் 044- 25353999 / 90031 61710 / 99625 00500 ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445 சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS ) மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377 மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639 போலீஸ் SMS :- —————————————-9500099100 போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832 போக்குவ

கணவன் – மனைவி கூட்டாக வீட்டுக் கடன் பெற முடியுமா?

வீடு வாங்க அல்லது கட்ட முடிவு செய்துவிட்டீர்களா? வங்கியில் வீட்டுக் கடனை வாங்கித்தானே வீடு வாங்க அல்லது கட்டப் போகிறீர்கள்? உங்கள் வீட்டில் கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறீர்களா? ஆம் என்றால், நீங்கள் இருவரும் இணைந்து வீட்டுக் கடன் வாங்கலாமே! கூடுதல் கடன் வீடு கட்ட முடிவு செய்ததுமே பலருக்கும் இருக்கும் ஒரே கனவு, எல்லா வசதிகளையும் புதிய வீட்டில் ஏற்படுத்திவிட வேண்டும் என்பதுதான். ஆனால், அதற்கான பட்ஜெட்டைப் போடும்போது செலவு அதிகமாகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம். இந்தத் தொகையை வங்கியில் அப்படியே கேட்கும்போது, எதிர்பார்க்கும் தொகையை வங்கிகள் கொடுத்துவிடுவதில்லை. ஒருவேளை கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் சென்று மாதச் சம்பளம் பெறுபவர்களாக இருந்தால், பிரச்சினையே இல்லை. அதிகமாக வீட்டுக் கடனை வங்கியில் பெற்றுக் கொள்ளலாம். கணவன் - மனைவி இணைந்து வாங்குவதில் இதுதான் மிகப்பெரிய நன்மை. பொதுவாக வீட்டுக் கடன் வாங்கும்போது கடன் வாங்கும் நபர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நிகர சம்பளத்தை வங்கிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளும். இதை வைத்துதான் எவ்வளவு கடன் வழங்கலாம் என்பதை வங்க

சிவப்பு விளக்குகளை யார் யார் பயன்படுத்தலாம்? தமிழக அரசு புதிய உத்தரவு:

சிவப்பு, நீல வண்ண விளக்குகளை எந்தெந்த அதிகாரிகள் பயன்படுத்தலாம் என்பது குறித்து தமிழக அரசு புதிய உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவு: அரசு வாகனங்களின் மேல்புறத்தில் சிவப்பு விளக்குகள் பொருத்துவதை முறைப்படுத்துவது தொடர்பாக, மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், அரசு வாகனங்களில் சுழலும் வகையிலான சிவப்பு விளக்குகளையும், சாதாரண வகை சிவப்பு விளக்குகள், நீல வண்ண விளக்குகளை யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையர் பரிந்துரைகளை அனுப்பியுள்ளார். அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு தமிழக அரசு உத்தரவைப் பிறப்பிக்கிறது. அதன்படி, சுழலும் வகையிலான சிவப்பு விளக்குகளைப் பயன்படுத்த அதிகாரம் பெற்றவர்கள்: மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர். சுழலும் வகையில் இல்லாமல், சாதாரண வகை சிவப்பு விளக்குகளை 14 பேர் பயன்படுத்திக

ஆர்.டி.ஐ.யின்கீழ் தகவல் தராத 50 அதிகாரிகளுக்கு 25,000 அபராதம்:

லக்னோ: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு துறைகளில் தகவல்கள் கோரப்பட்டிருந் தது. ஆனால், தகவல்களை குறிப்பிட்ட காலத்துக்குள் அளிக்காமல், அதிகாரிகள் சுணக்கம் காட்டி வருவதாக, மாநில தகவல் ஆணை யர் ஹபீஸ் உஸ்மானுக்கு புகார்கள் குவிந்தன. அதன்பேரில், அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கூட்டத்தை அவர் கூட்டி, புகார்கள் குறித்து விவாதித்தார். இதையடுத்து, உரிய தகவல்களை அளிக்காத, பல்வேறு துறைகளை சேர்ந்த 50 அதிகாரிகளுக்கு, தலா ஸி25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நிரந்தர பதிவாளர், தேர்வு ஆணையர் இல்லாத திறந்த நிலை பல்கலை:

மூன்றாண்டுகளாக, நிரந்தர பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இன்றி, பொறுப்பு அதிகாரி களை கொண்டே, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை செயல்பட்டு வருவதாக, புகார் எழுந்துள்ளது. விதிகளை மீறி...: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை, துவக்கப்பட்டு, 10 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக, பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பேராசிரியர்களே, கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். இதில், பல்கலை பொறுப்பு பதிவாளராக இருந்த, பேராசிரியர் முருகனுக்கு, விதிகளை மீறி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது குறித்து, கவர்னர் வரை பிரச்னை சென்றது. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. 'ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக இருப்பவர், அக்குழுவின் செயலரான பதிவாளர் பதவியில் இருக்கக்கூடாது' என, பல்கலை விதி இருப்பதால், பேராசிரியர் முருகன், சில தினங்களுக்கு முன், பதிவாளர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, அப்பதவிக்கு, கணிதத்துறை மூத்த பேராசிரியர், முருகன், பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். அதே போல், தேர்வு கட்ட

அரசு பள்ளியில் 10 மதிப்பெண் வாங்கினால் பிளஸ் 1 'பாஸ்': உதவிபெறும் பள்ளியில் 60 வாங்க வேண்டுமாம்:

பிளஸ் 1 தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயத்தில், பள்ளிகளுக்கிடையே, அதிக முரண்பாடு இருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலமாகி உள்ளது. அரசு பள்ளிகளில், பாடத்திற்கு, 10 மதிப்பெண் வீதம் வாங்கினால், பிளஸ் 1 பாஸ் எனும் நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், 40 முதல் 60 மதிப்பெண் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்பில், பொதுவாக மாணவர்களை, அதிகளவில் தோல்வி அடைய செய்வதில்லை. வருகைப் பதிவேடு மற்றும் பாடங்களில், ஓரளவிற்கு மதிப்பெண் பெற்றிருந்தால், 'பாஸ்' போட்டு விடுகின்றனர். இந்த நிலை, அரசு பள்ளிகளிலும், மெட்ரிக் பள்ளிகளிலும் மட்டுமே காணப்படுகின்றன. அரசு உதவிபெறும் பள்ளிகளில், பாடத்திற்கு, 40; 50; 60 மதிப்பெண் என, நிர்ணயித்து, மாணவர்களை, அதிகளவில், தோல்வி அடையச் செய்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலத்திற்கு வந்துள்ளது. பிளஸ் 1 வகுப்பில், மாணவர் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை, அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில், பள்ளி கல்வித்துறை, எந்த அளவுகோலையும் நிர்ணயிக்கவில்லை. மாறாக, அந்தந்த பள்ளி ஆசிரியர் குழுவே, தேர்ச்சிக்கான

இரண்டாவது மனைவிக்கும் 'பென்ஷன்' உண்டு - சென்னை உயர் நீதிமன்றம்:

இரண்டாவது மனைவிக்கு பென்ஷன் வழங்க மறுத்த, போக்கு வரத்து கழக பொது மேலாளரின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஈரோடு, தாராபுரத்தில், அரசு போக்குவரத்து கழக கிளையில், தொழில்நுட்ப அலுவலராக, பழனிசாமி என்பவர், பணியாற்றி வந்தார். 2011, ஆகஸ்டில், விபத்தில் சிக்கி, கோவை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செப்டம்பர், 13ல், இறந்தார். விவாகரத்து: இறந்த பழனிசாமிக்கு, மகுடேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளன. குடும்ப பென்ஷன் மற்றும் இதர பலன்களை வழங்கக் கோரி, மகுடேஸ்வரி, விண்ணப்பித்தார். ஈரோட்டில் உள்ள, அரசு போக்குவரத்து கழகத்தின் பொது மேலாளர், 'பழனிசாமியுடன் மகுடேஸ்வரிக்கு திருமணம் நடந்த போது, பழனிசாமியின் முதல் திருமணம் ரத்தாகி இருக்கவில்லை; எனவே, பென்ஷன் பெற, மகுடேஸ்வரிக்கு உரிமையில்லை' என, உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மகுடேஸ்வரி, தாக்கல் செய்த மனு: கடந்த, 1984ல், ஈஸ்வரி என்பவரை, என் கணவர் பழனிசாமி, திருமணம் செய்தார். பாரம்பரிய வழக்கப்படி, 1990ல், ஈஸ்வரியை விவாகரத்து செய்து விட்டார். அதன்பின், 1991ல், என்னை

தொடக்கபள்ளி மாணவர் எடை, உயரம் கணக்கெடுப்பு:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யும் வகையில், கல்வி தகவல் மேலாண்மை முறையை, தமிழக தொடக்க கல்வி இயக்ககம் அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்த அரசு உத்தரவு: தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு உட்பட்ட, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், முதல் மற்றும், இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியரின் எடை, உயரம் சம்பந்தமான விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதற்கு, பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள, அளவிடுதல் கருவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வசதி இல்லாத பள்ளிகள், அருகிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் உள்ள அளவிடுதல் கருவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், விபரங்களை சேகரித்து, தொடக்க கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

TNPSC போட்டி தேர்வு மூலம் கல்வித்துறையில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வில் சிக்கல்;

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தேர்வாகி, கல்வித் துறையில் பணியில் சேர்ந்தவர்கள், பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  டி.என்.பி.எஸ்.சி.,யில் தேர்வான 1,500க்கும் மேற்பட்டோர் 2013 மே மாதம் கல்வித்துறையின் கீழ் பல்வேறு ஊர்களில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தனர். இவர்கள் இரண்டு ஆண்டு தகுதி காண் பருவம் முடிவதற்குள் பதவி உயர்வுக்கான 45 நாள் சிறப்பு பயிற்சி, பவானி சாகர் அரசு பயிற்சி மையத்தில் முடிக்கவேண்டும். இந்த பயிற்சி முடித்திருந்தால் மட்டுமே பதவி உயர்வு பெறலாம் என்பது நடைமுறையில் உள்ளது. இப் பயிற்சிக்கு அனுப்ப கல்வித்துறை கால தாமதம் செய்து வருவதாகவும், இதன் காரணமாக பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் உள்ளதாகவும் கல்வித்துறை ஊழியர்கள் புலம்புகின்றனர். பாதிக்கப்பட்டோர் கூறியதாவது: தகுதிகாண் பருவத்திற்கு பதவி உயர்விற்கான பயிற்சி முடிக்கவேண்டும். இதற்கு கால வரைமுறை எதுவுமில்லை. எங்களுக்கு பின்பு பிற அரசு துறைகளில் பணியில் சேர்ந்தவர்கள் சிறப்பு பயிற்சி முடித்து, பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கல்வித்துறையில் மட்டுமே இந்த நிலை உள்ளது. சில அரசு பள்ளிகளில் பணி வரன்முறை

பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு:

புதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326 ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டம் 2003 ஏப்., 1ல் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இரண்டு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஊதியத்திற்கு தகுந்தாற்போல் கருவூலத்திலிருந்து மாதந்தோறும் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்து 2009 க்கு பின் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை. தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் தொடக்கல்வித்துறையில் ஓய்வுபெற்ற மற்றும் உயிரிழந்த, 79 ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையில் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 247 ஆசிரியர்களுக்கும் பணப்பலன் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஓய்வுபெற்ற ஆசிரியர்களும், உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்ற திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் ஜெபஜேம்ஸ் கூறியதாவது: பொதுநல நோக்கத்

School Education - Temporary Posts - Additional BT Assistant , High School HM posts and primary school HM Posts in High Schools / Primary Schools - Sanctioned Temporary Post Continuation orders - Reg Proc:

School Education - Temporary Posts - Additional BT Assistant , High School HM posts and primary school HM Posts in High Schools / Primary Schools - Sanctioned Temporary Post Continuation orders - Reg Proc

தேசிய அறிவியல் தின போட்டியில் வெற்றி: சிங்கப்பூர் செல்லும் 3 மாநகராட்சி மாணவர்கள்!

சென்னை மாநகராட்சி கல்வித்துறை மற்றும் க்வெட் அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்திய தேசிய அறிவியல் தின வினாடி வினா போட்டியில் சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகள் தேர்வு செய்யப்பட்டன. சென்னை அரும்பாக்கம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கே.சின்னையா, எஸ்.ஜீவானந்தம், ஜி.லலிதா ஆகியோர் கொண்ட அணி முதலிடத்தையும், ஏரிக்கரை நடுநிலைப் பள்ளி மாணவர்கள் எல்.ஜானகி, ஆர்.ரோஜா, எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட அணி 2-ம் இடத்தையும், வடபழனி நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எ.ரமணா, எஸ்.மோகன்ராஜ், எஸ்.சங்கீதா ஆகியோர் கொண்ட அணி 3-ம் இடத்தையும் பிடித்தன. முதல் 3 இடங்களைப் பிடித்த இந்த அணிகள் முறையே சிங்கப்பூர், கொல்கத்தா, பெங்களூர் ஆகிய ஊர்களில் உள்ள அறிவியல் மையங்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான பாஸ்போர்ட், பரிசுகளையும், மற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் மேயர் சைதை துரைசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், கல்வி

திரு.சுபோத்குமார் பள்ளி கல்வித்துறை துணை செயலாலராக நியமனம்:

திரு.சுபோத்குமார் பள்ளி கல்வித்துறை துணை செயலாலராக  நியமிக்கப்பட்டுள் ளா ர்.  தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி, சுபோத்குமார் பள்ளி கல்வித்துறை துணை செயலாலராகவும், கே.எஸ்.கந்தசாமி மற்றும் ஷில்பா பிரபாகர் சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்களாகவும், பிங்க்ளே விஜய் மாருதி தொழிற்துறை இணை செயலாளராகவும், கே.விஜயகார்த்திகேயன் கோவை மாநகராட்சி கமிஷனராகவும், பிரவீன் பி.நாயகர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு CRC யும் pri ,up- pri (22.11.2014) இந்த வாரம் நடைபெறும் !!!

இரண்டு CRC யும் pri ,up- pri (22.11.2014) இந்த வாரம் நடைபெறும் வரும் சனிக்கிழமை 22.11.2014 தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள பயிற்சி (pri-CRC) மற்றும் உயர் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கும் குறுவள மைய பயிற்சி (UP Pri -CRC) நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு :

தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.நர்சுகள் பணி நியமனம்கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ம் தேதியன்று, தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும் தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அரசு ஆணையை ரத்து செய்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடுதனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் மற்றும் அரசு சார்பில் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், எம்.சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2012-ம்

தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு: 1.39 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு: பள்ளி கல்வித் துறைச் செயலர்:

நலிவுற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 805 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என மாநில பள்ளி கல்வித் துறைச் செயலர் சபிதா கூறினார்.  பள்ளி கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தின விழா, டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை (நவ.14) கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பங்கேற்று கட்டுரை, பேச்சுப் போட்டி, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கியதோடு, சிறந்த 30 நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதுகளையும் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறைச் செயலர் சபிதா பேசியது: வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பள்ளி கல்வித் துறை மேம்பாட்டுக்காக தமிழக அரசு ரூ. 64 ஆயிரத்து 485 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் 14 வகை நலத் திட்டங்களுக்காக மட்டும் ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு த

தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலியல் கல்வி - சென்னை உயர் நீதிமன்றம்:

பாலியல் கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்று கொடுப்பது பற்றி தமிழக அரசு இரண்டு மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சூளையை சேர்ந்த வக்கீல் டி.சித்ராதேவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் குறிப்பாக, பெண் குழந்தைகள் தினந்தோறும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். வீடு, பள்ளி, வீதி என பல்வேறு இடங்களில் பெண் குழந்தைகள் இக்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். மத்திய அரசு கடந்த 2007ம் ஆண்டு நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், 53 சதவீத குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்று கூறியுள்ளது. இந்த கொடுமை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இந்த கொடுமையில் குழந்தைகள் சிக்காமல் இருக்க, பள்ளி பாடங்களில் பாலியல் கொடுமை தொடர்பான விவரங்களை பாடங்களாக்க வேண்டும். மேலும், பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த வேண்டும். பள்ளிப்பாடங்களில் பாலியல் கொடுமை தொடர்பான பாடங்களை சேர்க்க வேண்

பிளஸ் 2 தேர்ச்சி 95 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் - கல்வித்துறை செயலாளர்:

பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு 95 சதவீத தேர்ச்சி வீதத்தை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்தார். சென்னை சாந்தோம் பள்ளியில் குழந்தைகள் தினம், டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா ஆகியவை நடந்தன. விழாவில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளிக் கல்வி அமைச் சர் வீரமணி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர்கள் முக்கிய விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் பரிசு பெற்ற 53 மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர். எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது 48 பேருக்கும், திறமையான நூலகர்கள் 24 பேருக்கு பரிசுகளும் வழங்கினர். இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:  மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், கடந்த மூன்றரை ஆண்டுகளில் 72 ஆயிரத்து 557 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், 182 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 760 நடுநிலைப் பள்ளி கள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 400 உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாக தரம் உய

அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி கணித தேர்வில் மாறியது வினாத்தாள்:

காரைக்குடி அழகப்பா பல்கலை கழக இணைப்பு கல்லூரிகளுக்கான தேர்வு வினாத்தாளில் நேற்று நடைபெற வேண்டிய பாட தேர்வுக்குரிய வினாக்களுக்கு பதிலாக வேறு பாட தேர்வின் வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் இரண்டு மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்கியது. காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்தின் கீழ், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடக்கிறது நேற்று ?ம் ஆண்டு பி.எஸ்.சி., கணிதத்தில் 'நியூமெரிக்கல் அனாலசிஸ்' பாட தேர்வு நடந்தது. இதற்காக தேர்வு எழுத வழங்கிய வினாத்தாள்களில் நேற்று நடைபெற வேண்டிய தேர்வுக்குரிய கோடு எண், தேர்வின் பெயர் சரியாக அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் வினாத்தாளில் சில நாட்களுக்கு முன் நடைபெற்று முடிந்த புள்ளியியல் பாடத்திற்குரிய வினாக்கள் இடம் பெற்றிருந்தன. இதை பார்த்த மாணவர்கள் குழப்பமடைந்தனர். சில மாணவர்கள் தேர்வு கண்காணிப்பாளரிடம் வினாக்கள் மாறியது குறித்து கேட்டபோது, தேர்வு கண்காணிப்பாளர்கள், 'நாங்கள் கணித ஆசிரியர்கள் இல்லை,' எனக் கூறி முதன்மை தேர்வு கண்காணிப்பாளரிடம் புகார் செய்தனர். கண்காணிப்பாளர்கள் அழகப்பா