விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி-ஊரக தொழில்த்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆச்சியர் பங்கேற்பு:
15.11.2014 அன்று கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்துகொண்ட அறிவியல் கண்காட்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் ஊரக மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.ப.மோகன் அவர்கள், மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.வி.சம்பத் IAS அவர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு.டாக்டர்.காமராஜ் அவர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி அழகுவேல் பாபு அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் படைப்புகளை கண்டுகளித்து சிறந்த படைப்புகளை தேர்வுசெய்து பரிசளித்தனர்.இதில் முதல் நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் கலந்துக்கொள்ள தகுதியுடையவர் ஆவார்கள்.மேலும் மாவட்ட கல்வி அலுவலர்கள் திருமதி.கோ.தனமணி,திரு.ந.பாஸ்கரன் ,திரு.எஸ்.மாதவன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இது போன்ற நிகழ்வுகள் அரசுப்பள்ளிகளில் அரசால் நடத்தப்படும்போது மாணவர்களின் அறிவியல் திறமை கண்டிப்பாக வெளிப்படும் என்பதில் சந்தேகம் இல்லை..என்றும் ஆசிரியர்களின் நலனில் கல்விக்குரல்..
Comments
Post a Comment