Skip to main content

Posts

Showing posts from February, 2014

சென்னை பல்கலை: தொலைதூரக் கல்விநிறுவன தேர்வு முடிவு வெளியீடு

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் சார்பில் கடந்த 2013 டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட இளநிலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் (பிப்.28) வெளியிடப்படுகிறது.www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் தனிப்பிரிவில் 3 ஆண்டுகளில் 10 லட்சம் மனுக்களுக்கு தீர்வு:

கடந்த 2011 மே மாதம் முதல் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வந்த 10,75,743 மனுக்களில் 9,97,280 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: முதலமைச்சரின் தனிப் பிரிவில் பொதுமக்களிடமிருந்து அஞ்சல், மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள் மூலம் தினமும் சுமார் 3 ஆயிரம் மனுக்கள் பெறப்படுகின்றன. கடந்த 2011 மே மாதம் முதல் இதுவரை 10 லட்சத்து 75 ஆயிரத்து 743 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 9 லட்சத்து 97 ஆயிரத்து 280 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இந்த மனுக்களின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் பெற்றோரை இழந்த நந்தினி (14), அனுஷா (13), திரிஷா (11), நமீதா (5) ஆகியோருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சத்துக்கான வைப்புநிதி பத்திரங்கள்,வில்வித்தை வீராங்கனையான மாற்றுத்திறனாளி எஸ். கலைச்செல்விக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க ரூ. 1,14,532, மாற்றுத்திறனாளியான பொறியியல் மாணவர் பரணிக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 21,430-க்கான காசோலைகள் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (பிப்

7–வது சம்பள கமிஷனின் யோசனைப்படி, அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மந்திரிசபை ஒப்புதல் - தினந்தந்தி:

மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்குவது என்று மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும். 80 லட்சம் பேர் இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் ஆக மொத்தம் 80 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜனவரி 1–ந் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 7–வது சம்பள கமிஷனின் யோசனைப்படி, அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மந்திரிசபை ஒப்புதல் அளித்து இருக்கிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த சம்பளம் சுமார் 30 சதவீதம் உயரும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டு 90 சதவீதம் ஆனது.

மார்ச் 6 ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேர், வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்:

மார்ச் 6 ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேர், வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், பிப்., 25, 26 ல் போராட்டம் நடத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, "டிட்டோஜாக்' அமைப்பினரும், மார்ச் 6ல், போராட்டம் அறிவித்துள்ளனர். இதில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு தொடக்க மற்றும் நடுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கங்களை (டிட்டோஜாக்) சேர்ந்த, ஒரு லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், ""மதுரை மாவட்டத்தில் 3,000 ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். எங்கள் கோரிக்கை குறித்து, கல்வி அதிகாரிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு எட்டவில்லை.

50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது பற்றி இன்னும் குழப்பம் நீடிப்பு:

The expectations will not subside until the central government makes it clear whether 50% DA Merger will be approved or not. Though there were mixed news about whether 50% DA Merger is approved or not, Railway and Defence Federation’s Leaders told that the 50% DA merger was approved by the Cabinet. A website belongs to an important railway federation also flashed a news confirming merger of 50% DA is approved by the cabinet. Sometime later it changed its stand and removed the flash news One of the News Media also confirmed that 50% DA is approved by the cabinet. But so far any announcement in this regard has not been come from the Government. Some Leaders of the Federations told, ‘when we had a talk with them, initially the central government agreed in principle to merge the 50% of Dearness Allowance and its decision was expected from the cabinet meeting held yesterday evening. But we are unaware of the reason for the government not announcing its decision.’ Earlier reports claimed tha

தொடக்கக்கல்வித்துறையில் முதலில் 1.1.2013ன் படி பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இயக்குனரிடம் திரு.செ.முத்துசாமி வலியுறுத்தல்:

இன்று மாலை தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.செ.முத்துசாமி அவர்கள் தொடர்பு கொண்டு 2013-14ம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வின் நிலை பற்றி கேட்டறிந்தார். அப்பொழுது இயக்குனர் அவர்கள் கலந்தாய்வு நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்தார். அவற்றில் ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் முதலில் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் வழங்கிவிட்டு பின்பு பதவி உயர்வு நடத்துங்கள் என்று வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். இல்லையெனில் வழக்கிற்கு செல்வதாக அறிவித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒரு தரப்பினர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி விட்டு மாறுதல் வழங்குங்கள் என வலியுறுத்தி வருகின்றனர். அனைத்து காலிப் பணியிடங்கள் கணக்கெடுப்பு பணிகள் முடிந்த நிலையில் மாறூதல் வழங்கினால் காலிப்பணியிடங்கள் நிலை மாறும் என்றும், இதனால் பல சிக்கல்கள் எழுந்துள்ளதால், அரசின்  தெளிவுரை ஆணை வேண்டி அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாகவும், அரசின் ஆணை கிடைத்தவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இயக்குனர் உறுதியளித்ததாக திரு.முத்துசாமி தெரிவித்தார். மேலும் தொட

தொடக்கக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு? பதவி உயர்வு வாய்ப்பும் பறிபோகும் நிலை... அனைத்து ஆசிரியர் சங்கங்களும் குரல் கொடுக்குமா...?

தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கென்று இருக்கும் ஒரே வாய்ப்பு பதவி உயர்வு தான். ஒன்று தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராகவோ அல்லது பட்டதாரி ஆசிரியராகவோ பதவி உயர்வு மூலம் செல்வதுதான். கடந்த சில ஆண்டுகளாக பதவி உயர்வும் விதிகளின் படி கிடைக்கவில்லை என்றும், அதற்கும் பல்வேறு கட்ட போராட்டம் நடத்த வேண்டியுள்ளது என இடைநிலை ஆசிரியர்கள் குமறுகின்றனர். இதனால் அவர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும் பதவி உயர்வு கலந்தாய்வு இந்தாண்டு நீதிமன்ற வழக்கால் நடைபெறவில்லை. உயர்நீதிமன்றம் வழக்கில் இறுதித்தீர்ப்பு வந்த பின்பும் பல்வேறு காரணங்களால் பதவி உயர்வு கால தாமதமாகி வந்தது. இன்று பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என்று எதிர்ப்பார்த்து ஆசிரியர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. அரசுத்தரப்பில் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்த பணியிடங்கள் திரும்ப பெற இயலாது மற்றும் தேர்தல் என காரணங்கள் கூறி கலந்தாய்வை ஒத்திவைப்பது என்பது ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்று தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை சந்திக்க சென்ற இடைநிலை ஆசிரியர்களிட

தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு ஜுன் மாதம் 01.01.2014 முன்னுரிமைப் பட்டியலின்படி தான் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது :

2013-14ம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்ற வழக்குகளால் தடைப்பட்டது. அண்மையில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பதவி உயர்வு மற்றும் பணி நியமனத்திற்கு இரட்டைப்பட்டம் செல்லாது என தீர்ப்பளித்து எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது, ஆனால் தொடக்கக் கல்வி துறையில் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த வார இறுதியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளதால் தற்பொழுது பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இயலாது எனவும் ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஒப்படைத்த 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் திரும்ப பெற வாய்ப்பில்லை எனவும், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்த பணியிடங்கள் போக மீதம் உள்ள 253 பணியிடங்களுக்கு 2014 முன்னுரிமைப் படியலின்படி ஜுன் மாதம் கலந்தாய்வு நடத்த உள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் திரு. தியாகராஜன் அவர

விதிமுறைகளை பின்பற்றாமல் ஆசிரியர்கள் நியமனம்? யு.ஜி.சி.,க்கு உத்தரவு :

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனம் குறித்து, பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற பேராசிரியர், இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், "யு.ஜி.சி., விதிமுறைகளை பின்பற்றாமல், ஆசிரியர்களை, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் நியமித்துள்ளது. நிபுணர்களை நியமித்து ஆசிரியர்களின் தகுதி பற்றி, ஆய்வு செய்யுமாறு யு.ஜி.சி.,க்கு உத்தரவிட வேண்டும். யு.ஜி.சி.,யின் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை, உறுதி செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. தற்காலிக தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி, நீதிபதி ரவிச்சந்திரபாபு அடங்கிய, முதல் பெஞ்ச் மனுவை விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சத்தியசந்திரன், யு.ஜி.சி., சார்பில், வழக்கறிஞர் பி.ஆர்.கோபிநாதன் ஆஜராகினர். விதிமுறைகளை மீறி, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனரா என்பதை, ஆராய வேண்டிய பொறுப்பு, யு.ஜி.சி.,க்கு உள்ளது. எனவே, யு.ஜி.சி., ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. ஆய்வின் போது, சரிபார்ப்பு நடவடிக்கைக்கா

முழுமையாக தர ஊதிய அடிப்படையில் தேர்தல் பணிகள் அளிக்கப்பட வேண்டும்-பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு:

சம்பள அடிப்படையில் வாக்குச்சாவடி அலுவலர் பணி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. கலெக்டரிடம் கோரிக்கை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் இள.பாபுவேலன், செயலாளர் பிளசிங் பாக்கியராஜ் ஆகியோர் நெல்லை மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான மு.கருணாகரனை சந்தித்து ஒரு கோரிக்கை மனுகொடுத்தார்கள். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது: – நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் பணிகளுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களாக தர ஊதியம் அடிப்படையில் தேர்தல் பணி பதவிகள் அளிக்க வேண்டும். பணி ஒதுக்கீடு கடந்த தேர்தலின் போது அதிக தர ஊதியம் ரூ.4,600 பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் வாக்குச் சாவடி அலுவலர் நிலை –1 ஆக பணி வழங்கப்பட்டது. ஆனால் பட்டதாரி ஆசிரியர்களை விட குறைவான தரஊதியம் ரூ.4,500 பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கோ வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணி வழங்கப்பட்டது. இதனால் தேவையற்ற குளறுபடிகள் ஏற்பட்டன. இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

6வது ஊதியக் குறைகளை நிவர்த்தி செய்ய நீதிபதி தலைமையில் குழு; அரசாணை பிறப்பித்த பிறகு ஊதிய குறைந்த ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என உத்தரவு :

தமிழக அரசுப் பணியாளர்களின் ஆறாவது ஊதியக் குழு தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தி தலைமையில் குழுவை ஏற்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊதியக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை மாற்றி அமைத்து, கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி மற்றும் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி அரசாணைகள் வெளியிடப்பட்டன. இந்த அரசாணையால் தங்களின் ஊதியம் வெகுவாக குறைந்துள்ளது. தங்களின் கிரேடுகள் மாறியுள்ளன எனக் கூறி அந்த அரசாணைகளை ரத்து செய்யுமாறு குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிதிகள்கள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது. அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி, அரசு சிறப்பு வழக்குரைஞர் டி.என்.ராஜகோபாலன் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணைக்குப் பிறகு நீதிபதிள் பிறப்பித்த உத்தரவு: அரசுப் பணியாளர்களுக்கான ஊதியத்தை குறைப்பதற்கு முன் அடிப்படை விதிகள்

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் அனுமதி? - Dinakaran News

இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இம்முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள். மேலும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதனால் பலன் பெறுவார்கள். மேலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதிய வரம்பை ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் உடனடியாக 28 லட்சம் சந்தாதாரர்கள் பலன் அடைவார்கள்.இபிஎஸ் - 95 திட்டத்தின் கீழ் வரும் சந்தாதாரர்களுக்கு இப்பலன் கிடைக்கும்.இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு வரும் நிதி ஆண்டில் மட்டும் 1,217 கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படும். யூரியாவுக்கான உற்பத்தி விலையை டன்னுக்கு 350 ரூபாய் அதிகரிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. யூரியா உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் முதலீட்டுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தவும் ஒப்புதல் தரப்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு வழங்கியது எதிர்த்து வழக்கு, தமிழக அரசு இன்று பதில் தாக்கல்:

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய இன்று வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இன்று தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் என்ன விவரங்கள் அடங்கியுள்ளன என்பது பற்றி,  வழக்கு  அடுத்து விசாரணைக்கு வரும் பொழுது விவரம் தெரியவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  

6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை நீக்க மீண்டும் ஒரு குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு :

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதில் பல துறைகளில் ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை நீக்க அரசு நியமித்த குழுக்களினால் பலன் ஏற்படவில்லை. இதனால் ஊழியர்கள் சங்கங்கள் குறைப்படுகளை நீக்க உத்தரவிடக் கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இவ்வழக்கு விசாரித்த நீதிமன்றம் 2 முதன்மை செயலாளர் அடங்கிய ஒரு புதிய குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை அரசு/அரசு நிதி உதவி பள்ளிகளுக்கு நாளை 01.03.2014 விடுமுறை-முதன்மைக் கல்வி அலுவலர் விழுப்புரம் மாவட்டம் :

äf äf mtru« kht£l Kj‹ik¡ fšémYtyç‹ brašKiwfŸ, éG¥òu« e.f.v©.949/M3/2013 ehŸ   28.02.2014. bghUŸ-          gŸë¡ fšé¤ Jiw –  mid¤Jtif ca®ãiy / nkšãiy¥ gŸëfŸ – 01.03.2014 m‹W xUehŸ gŸë éLKiw  m¿é¤jš – rh®ò.                                 gh®it-         1) murhiz (ãiy) v©. 1310, bghJ(gt) Jiw, ehŸ. 15.11.2013. 2) éG¥òu« kht£l M£Á¤ jiytç‹ neuo m¿ÎiufŸ     ehŸ. 28.02.2014.                                                                                                                         ***                         gŸë¡ fšé¤ Jiwahš tH§f¥g£l 2013-14 gŸë eh£fh£oæ‹go 01.03.2014 rå¡»Hik m‹W gŸë ntiy ehŸ vd  m¿é¡f¥g£LŸsJ.    j‰nghJ gh®it 2-š fhQ« éG¥òu« kht£l M£Áa® mt®fë‹ neuo m¿Îiuæ‹go 2014 ghuhSk‹w¤ nj®jiy K‹å£L nj®jš mYty®fS¡fhd T£l« éG¥òu« kht£l¤Âš gšntW Ïl§fëš 01.03.2014 m‹W eilbgw cŸsjhf bjçé¡f¥g£LŸsJ.                         vdnt nk‰go kht£l M£Áa® mt®fë‹ m¿Îiuæ‹go 01.03.2014 rå¡»Hik m‹W  mid¤Jtif ca®ãiy k‰W« nkšãiy¥ gŸëfS¡F« bghJ éLKiw ehŸ vd m¿é¡f¥L»wJ. nkY« 01.03.2014 m‹W eilbgWtjhf

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு !மற்றும் குறைந்த பட்ச பென்சன் ரூ. 1000: மத்திய மந்திரி சபை ஒப்புதல்:

டெல்லியில் இன்று மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு முடிவுகள் எடுத்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தேர்தல் விரைவில் வர உள்ளதால் அரசு ஊழியர்களையும் மக்களையும் கவரும் வகையில் மத்திய மந்திரி சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.  மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப் படி உயர்வு வழங்க மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்த அகவிலைப் படி உயர்வு பொருந்தும்.  மத்திய அரசின் இந்த முடிவால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு பெற்று பலன் அடைவார்கள். அது போல சுமார் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் கூடுதல் ஓய்வூதியம் பெறுவார்கள். அகவிலைப்படி உயர்வு 100 சதவீதத்தை எட்டியதைத் தொடர்ந்து அதில் 50 சதவீதத்தை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.  அதை இன்று மத்திய மந்திரி சபை ஏற்றுக் கொண்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்ப

என்ஜினீயரிங் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் இணையத்தில் வெளியீடு:

ஐகோர்ட்டில் பூபால்சாமி என்ற மாணவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘‘என்ஜினீயரிங் படிப்பில் சேரும் போது நல்ல கல்லூரியை தேர்ந்து எடுப்பதில் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறி இருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சதீஷ்குமார், அக்னி கோத்ரி, நீதிபதி ரவிச்சந்திர பாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘என்ஜினீயரிங் கல்லூரிகளின் தரவரிசை குறித்து ஆய்வு செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சத்தில் தனி கமிட்டி உள்ளது. இந்த ஆய்வு செய்யும் அதிகாரம் பல்கலைக்கழகத்திற்கு கிடையாது. அதே நேரம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு என்ஜினீயரிங் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டு உள்ளோம். அவற்றின் அடிப்படையில் சிறந்த கல்லூரியை தேர்வு செய்து கொள்ளலாம்’’ என்று கூறி இருந்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

பிளஸ்2 தேர்வு மையத்தில் தரைவழி தொலைபேசியை மட்டுமே பணியாளர்கள் பயன்படுத்த தேர்வு துறை இயக்குநரகம் உத்தரவு:

பிளஸ்2 தேர்வில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக கைபேசிகளை நிறுத்தம் செய்து பாதுகாப்பாக வைப்பதோடு, அவசர தொடர்புக்கு தரைவழி தொலைபேசியை மட்டுமே பயன்படுத்துவதற்கு அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ்2 அரசு பொதுத் தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 25-ம் தேதி வரையில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வை மாநிலத்தில் மொத்தம் 12 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதுகிறார்கள். இதில், விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர்- 8177 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர்-7296 பேரும், அருப்புக்கோட்டை-7216 பேரும் என மொத்தம் 22689 மாணவ, மாணவிகள் பங்கேற்க இருக்கிறார்கள். இத்தேர்வில் நிகழாண்டு முதல் புதிய நடைமுறை பின்பற்றப்படவும் இருக்கிறது. அதேபோல், வினாத்தாள் கொண்டு செல்வதற்கும், விடைத்தாள்களை சேர்ப்பதற்குமான பணியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவை பிளஸ்2 தேர்வில் முறைகேடுகள், ஆள்மாறாட்டம் மற்றும் காப்பி அடித்தல் போன்றவைகளை தடுப்பதற்காக அரசு தேர்வு துறை இயக்குநரகம் குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றவும் உத்தரவிட்டுள்ளது. முதன்மைக் கண்காணி்ப்பாளர் வழித்தட அலுவலருடன் முன்கூட்டியே கலந்துபேசி, வ

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவாலகங்களின் தொலைபேசி எண்கள்(CEO OFFICE PHONE NUMBERS):

1. VILLUPURAM 04146 220402   2. COIMBATORE 04222391849 3.CUDDALORE 04142 286038 4.DHARMAPURI 04342 260085,261872 5. DINDIGUL 0451 2426947 6. ERODE 0424 2256499,9442205805 7. KANCHEEPURAM 044 27222128 8. KANYAKUMARI 04652 227275 9. KARUR 04324 241805 10. KRISHNAGIRI 04343 239249 11. MADURAI 0452 2530651 12. NAGAPATTINAM 04365 243354 13. NAMAKKAL 04286 232094 14. PERAMBALUR 04328 224020 15. PUDUKOTTAI 04322 222180 16. RAMNAD 04567 220666 17. SALEM 0427 2450254 18. SIVAGANGAI 04575 240408 19. TANJORE 04362 237096 20. NILGIRIS 0423 2443845 21. THENI 04546 250315 22. THIRUVANNAMALAI 04175 224379 23. TIRUVARUR 04366 225903 24. TRICHY 0431 2708900 25. TIRUNELVELI 0462 2500702 26. TUTICORIN 0461 2326281 27. VELLORE 0416 22526690 28.  CHENNAI 0442432735 29. VIRUDHANAGAR 04562 252702

பொதுத்தேர்வுகளில் முழு மதிப்பெண் அள்ளுவது எப்படி?-மாணவர்களுக்கான பயனுள்ளக்கட்டுரை:

என்ன வியூகம் வகுத்து, பிளஸ் 2 தேர்வை எதிர்கொண்டால், முழு மதிப்பெண் பெறலாம் என, தனது கடந்தாண்டு அனுபவங்களை 'டிப்ஸாக' தருகிறார், 2013ம் ஆண்டில், பிளஸ் 2வில், மதுரை மாவட்டத்தில் முதல் 'ரேங்க்' பெற்ற சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவி ராஜேஸ்வரி: பொதுவாக, அரசு தேர்வு என்ற டென்ஷனை முதலில் மூட்டை கட்டிவிட வேண்டும். மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொண்டு, தேர்வு அறைக்குள் மாணவர்கள் நுழைந்தாலே, பாதி வெற்றி உறுதி. ஒரு மார்க் வினாக்களுக்கு வேகமாக எழுதுவதன் மூலம், நெடுவினாவிற்கு தேவைப்படும் கூடுதல் நேரத்தை சரிக்கட்டலாம். எனவே, முடிந்த வரை இப்பகுதியை விரைவில் முடிக்க வேண்டும். இப்பகுதியில், முழு மதிப்பெண் பெறுவது மிக முக்கியம். ஒவ்வொரு பாடத்திலும் கடின பகுதி என்பதை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள வேண்டும். அதை, அதிகாலை எழுந்தவுடன் படித்தால், வினாத்தாளில் கடின பகுதி வந்து விடுமோ என்ற கவலை, பயம் இருக்காது. குறைந்தது ஐந்து ஆண்டுகளில் கேட்கப்பட்ட, வினாவங்கியில் இடம் பெற்ற, கேள்விக்கான விடையை முழுமையாக படித்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, பழைய வினாத்தாள்களில் இருந்தே, அதிக ஒரு மார்க் கேள்விகள் இடம்பெறுகி

பள்ளியின் முதல்வர் முதல் ஓ.ஏ., வரை தேர்வு மையத்தில் யாருக்கும் அனுமதி கிடையாது : தனியார் பள்ளிகளுக்கு, தேர்வு துறை, "செக்':

கடந்த காலங்களில், தேர்வு மையத்தின், முதன்மை கண்காணிப்பாளராக, பள்ளியின் முதல்வரே இருப்பார். மேலும், தேர்வு அலுவலர்களுக்கு உதவுவதற்காக, பள்ளியின், உதவியாளர் (ஓ.ஏ.,) இருப்பார். தற்போது, பள்ளி முதல்வரில் இருந்து, ஓ.ஏ., வரை, எவருக்கும் அனுமதி கிடையாது. வேறு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர், முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவார். தேர்வு துவங்குவதற்கு முன், பள்ளி வளாகத்திற்குள், நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட, நுழைய அனுமதி கிடையாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை : "தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்குள், பள்ளி முதல்வர் முதல், ஓ.ஏ., வரை, ஒருவரும் நுழையக் கூடாது' என, தேர்வுத்துறை, கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. தேர்வில், சிறு அளவிற்கு கூட, முறைகேடு நடக்கக் கூடாது என்பதில், தேர்வுத்துறை, கவனமாக உள்ளது. இதற்காக, பல, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, துறை எடுத்து வருகிறது. பிளஸ் 2 தேர்வு, 2,238 மையங்களிலும்; ??ம் வகுப்பு தேர்வு, 3,183 மையங்களிலும் நடக்கின்றன. இவற்றில், பெரும்பாலான மையங்கள், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில், பல முறைகேடுகள், தனியா

லோக்சபா தேர்தல் பணியில், "வெப் கேமராக்களை' இயக்கும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்த முடிவு:

நீலகிரி லோக்சபா தேர்தல் பணியில், "வெப் கேமராக்களை' இயக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என, மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மாவட்டம் முழுக்க ஓட்டுச் சாவடிகளில் பணிபுரிய, 3,060 ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்; இருப்பினும், கூடுதலாகவே பணியாளர்கள் உள்ளனர். தவிர, 62 தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 9 பறக்கும் படை, 9 கண்காணிப்புப் படை அலுவலர்கள் பணியில் நியமிக்க உள்ளனர். தேர்தல் பணியாற்ற உள்ள அதிகாரிகள், அலுவலர்களுக்கு பல கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தவிர, ஓட்டுப்பதிவை கண்காணிக்க 305 வெப் கேமராக்கள் தயாராக உள்ளன; கூடுதலாக, 318 மேராக்கள் வரவழைக்கப்பட உள்ளன. வெப்கேமராக்களை இயக்கும் பணியில் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்படுவர். இவ்வாறு, கலெக்டர் சங்கர் கூறினார்.

பிளஸ்2, எஸ்எஸ்எல்சி தேர்வு பணிச்சுமை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளிக்க வேண்டும்:

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளதால் உயர்நிலை மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, நாடாளுமன்ற தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிகிறது. அத்தேர்வை, சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். அதேபோல பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிகின்றன.இந்த தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தற்போது மேற்கண்ட இரண்டு வகுப்புகளுக்கும் செய்முறைத் தேர்வுகள் நடந்து வருகின்றன. இதற்கான மதிப்பீடுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயார் செய்து, ஆன்லைன் மூலம் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். பின்னர், எழுத்து தேர்வுகள் தொடங்கும் முன்னதாக தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டுகள் வழங்குதல், தேர்வு மையங்களில் பதிவுஎண் வாரியாக அறைகள் ஒதுக்கீடு செய்வது, கேள்வித்தாள் எடுத்து வந்து தேர்வு நேரத்தில் வினியோகம் செய்தல், விடைத்தாள்களை கட்டுப்போட்டு திருத்தும் மையங்

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊதிய உயர்வினை அறிவித்துள்ளது.தமிழகத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.  மேற்படி கூட்டுறவுச் சங்கங்கள் கடந்த 33 மாதங்களில் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. 31.3.2011 அன்று 1,245 கோடியே 51 லட்சம் ரூபாயாக இருந்த சொந்த மூலதனம், 31.3.2013ல் 1,782 கோடியே 16 லட்சம் ரூபாயாகவும், வைப்பீடுகள் 4,776 கோடியே 74 லட்சம் ரூபாயிலிருந்து 6,268 கோடியே 80 லட்சம் ரூபாயாகவும், கடன் உதவி 11,857 கோடியே 24 லட்சம் ரூபாயிலிருந்து 16,764 கோடியே 52 லட்சம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.  மொத்தமுள்ள 4,524 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில், 671 சங்கங்கள் தொடர் லாபத் லும், 3,442 சங்கங்கள் சில ஆண்டுகளில் லாபம் ஈட்டியும், மீதமுள்ள 411 சங்கங்கள் நட்டத்திலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கூட்டுறவுப் பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்து பரிசீலிக்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அடுத்து, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கீழ்க்காணும் ஊதிய உயர்வினை  தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணில், 5 சதவீத குறைப்பு சலுகையை வழங்கிவிட்டு, மறுபக்கம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளவில், 3 மதிப்பெண்ணை குறைத்திருப்பது, தேர்வர்கள் மத்தியில், குமுறலை ஏற்படுத்தி உள்ளது:

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணில், 5 சதவீத குறைப்பு சலுகையை வழங்கிவிட்டு, மறுபக்கம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளவில், 3 மதிப்பெண்ணை குறைத்திருப்பது, தேர்வர்கள் மத்தியில், குமுறலை ஏற்படுத்தி உள்ளது. டி.இ.டி., தேர்வில், மொத்தம் உள்ள, 150 மதிப்பெண்ணில், தேர்ச்சி பெற, 60 சதவீதமான, 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற விதிமுறை முதலில் இருந்தது. சமீபத்தில், இந்த அளவை, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்தார். 5 சதவீத சலுகையினால், 82 மதிப்பெண் பெற்றவரில் இருந்து, அனைவரும், தேர்ச்சி பெற்றனர். டி.இ.டி., தேர்வில் எடுக்கும் மதிப்பெண், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில், 60க்கு கணக்கிடப்படுகிறது. பிற கல்வி தகுதிகளில் எடுக்கும் மதிப்பெண், 40க்கு கணக்கிடப்படுகிறது. இரண்டையும் சேர்த்து, 100க்கு, தேர்வர் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில், வேலைக்கான தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தயாரிக்கிறது. இதில், டி.இ.டி., தேர்வில் எடுக்கும் மதிப்பெண் கணக்கிட்டு, அரசாணை வௌ?யிட்டதில், தேர்வர்களுக்கு, மூன்று மதிப்பெண் கு

இணைப்பு பள்ளிகளில் தனி பயற்சி வகுப்புகளுக்கு தடை - சி.பி.எஸ்.இ., அதிரடி:

சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஜே.இ.இ., போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துவது மற்றும் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய படிப்புகளை நடத்துவது உள்ளிட்டவற்றை கைவிட வேண்டும் என்று சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாகசி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கல்வியை வணிகமயமாக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் மற்றும் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய படிப்புகளை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை சி.பி.எஸ்.இ., வாரிய பள்ளிகள் உடனடியாக கைவிட வேண்டும். இவை தினசரி வேலை நாள் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகின்றன. சில பள்ளிகள், JEE போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை, பள்ளி வளாகத்திற்குள்ளேயே நடத்துகின்றன. இத்தகைய நடவடிக்கைகள், சி.பி.எஸ்.இ., அமைப்பால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, இந்த முறைகேட்டை அத்தகையப் பள்ளிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் சி.பி.எஸ்.இ., வாரியத்தின் உத்தரவை மதிக்காத பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என்று அனைத்து தரப்பாரும், மேற்கூறிய முறையற்ற ந

பொதுத்தேர்வு விடைத்தாள் கட்டுகள் தொலைவதைத் தடுக்க, தபால் துறைக்குப் பதிலாக பள்ளிக் கல்வித் துறை வாகனங்களிலேயே விடைத்தாள்களைக் கொண்டுவர அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு :

பொதுத்தேர்வு விடைத்தாள் கட்டுகள் தொலைவதைத் தடுக்க, தபால் துறைக்குப் பதிலாக பள்ளிக் கல்வித் துறை வாகனங்களிலேயே விடைத்தாள்களைக் கொண்டுவர அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள்கள் மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்களை எடுத்துவரும்போது அவை தொலைந்துபோயின. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இந்த ஆண்டு தபால் துறைக்குப் பதில் தனியாரை பணியமர்த்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தபால் துறைக்குப் பதிலாக பள்ளிக் கல்வித் துறையினரின் வாகனங்களிலேயே விடைத்தாள்களை மாவட்டங்களில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு எடுத்துவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடைத்தாள்களை எடுத்துவரும் பொறுப்பு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இதற்காக பிரத்யேகமான வாகனங்களை அமர்த்திக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறியுள்ளார். இது தொடர்பான முழுமையான அறிவிப்பு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வினாத்தாள்களை விநியோகிக்கவும் வாகனம்: வழக்கமாக, வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்க

கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,300 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் :

கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,300 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சில சங்கங்களைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பிப்ரவரி 25-ஆம் தேதி உள்ளிருப்பு போராட்டமும், பிப்ரவரி 26-ம்தேதி ஒருநாள் விடுப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்குமாறு,அனைத்து மாவட்ட தொடக்கல்வி அலுவலர்களுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், சுமார் 1,300 ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியலை அனுப்புமாறு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். பட்டியல் பெறப்பட்டவுடன், சம்பளம் பிடித்தம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக, கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது

வஞ்சிக்கப்படும் தொடக்ககல்வித்துறை ஆசிரியர்கள் பதவி உயர்வு உடனடியாக வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை:

தொடக்ககல்வித்துறையில் ஆண்டு தோறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு ,பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்கப் பட்டு  வருகிறது  கடந்த 2013 ம் ஆண்டு மே மாதம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது .அப்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் இரட்டைப்பட்டம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது இதனால் பதவி உயர்வு கிடைக்காத ஆசிரியர் பலரும் பணியிட மாறுதல் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்  வழக்கு முடிந்து ஒரு மாதமாகியும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தவில்லை .இந்நிலையில் பள்ளிகல்வித்துறையில் சென்ற வாரமே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது .ஏற்கனவே தர ஊதியமும் குறைவாக பெற்று வருகிறோம் ,இந்த பதவி உயர்வு கிடைக்கும் என்று மிகுந்த ஆவலோடு இருந்த எங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்க்கான அறிகுறியே இல்லாமல் இருக்கிறது .இவ்வாறு தொடக்க கல்வித் துறையில்   பணி யாற்றும்  இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் தொடர்ந்து வஞ்சிக்கப்ப்பட்டு வருகிறார்கள்