வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ள 652 கணினிப் பயிற்றுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, அந்த வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:652 கணினிப் பயிற்றுநர் காலிப் பணியிடங்களுக்கான தெரிவுப் பணிகள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில் நடைபெற உள்ளதால், அந்த அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்படும் பணிநாடுநர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் இது தொடர்பாக எந்தவித விண்ணப்பங்களையும் கோராத நிலையில், இது சார்ந்த விண்ணப்பங்களை நேரடியாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்ப வேண்டாம் என பணிநாடுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment