தொடக்க கல்வி பட்டயத்தேர்விற்கான தேதி, மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சிநிறுவனம் தெரிவித்துள்ளது.தொடக்ககல்வி பட்டயத் தேர்விற்கான முதல்மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு நாட்கள்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. திருமூர்த்திமலை மாவட்ட கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளஅறிக்கை: ஜூன் 11ம் தேதிதுவங்க இருந்த இரண்டாம் ஆண்டுதேர்வுகள், ஜூன் 26ம் தேதிதுவங்கி; ஜூலை 3ம் தேதிமுடிகிறது.
இதன்படி26ம்தேதி-இந்திய கல்வி முறை, 27-கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும், 28- தமிழ் மொழிக்கல்வி, 30- ஆங்கிலமொழிக் கல்வி, ஜூலை 1ம்தேதி- கணிதவியல், 2- அறிவியல், 3- சமூக அறிவியல்.
ஜூன்20ம் தேதி நடக்கயிருந்த முதலாண்டுபட்டயத் தேர்வுகள் ஜூலை 7 ம்தேதி துவங்கி; 14ம் தேதி வரை நடக்கிறது. ஜூலை 7 ம்தேதி- கற்கும் குழந்தை, 8- கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும், 9-இளஞ்சிறார் கல்வி மொழிக் கல்வி, 10-கணிதவியல், 11- அறிவியல், 12- சமூக அறிவியல், 14- ஆங்கிலமொழிக் கல்வி. தேர்வுகள் காலை10.00 மணி முதல் 1.00 மணி வரை நடக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment