ஆசிரியர்தேர்வு வாரி யம் சார்பில்ஆசிரியர் தகுதி தேர்வுகள் கடந்தஆண்டு ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கானவிடைகள் கடந்த நவம்பர்5ம் தேதி வெளியிடப்பட்டது. இதில்வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்டம் வாரியாக நடைபெற்றது. இதுவரைசான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கா மல் விடுபட்டவர்களுக்கு மேலும்ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்ஜூன் 10ம் தேதி முதல்13ம் தேதி வரை மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் ஆகிய 4 மையங்களில் மட்டும்சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த ஆசிரியர் தேர்வுவாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காகதேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்இருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு கடிதம் மற்றும்பயோடேட்டா போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ்சரிபார்ப்பு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல்ஆகிய மாவட்டங்களுக்கு மதுரை ஒசிபிஎம் பெண்கள்மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. இதனைபோன்று ஜெயராணி பெண்கள் மேல்நிலைபள்ளி சேலம், பிஷப் ஹெர்பர்மேல்நிலை பள்ளி புதூர்& திருச்சி, காமராஜ் முனிசிபல் ஆண்கள் மேல்நிலை பள்ளிவிழுப்புரம் ஆகிய இடங்களிலும் அந்தந்தபகுதி மாவட்டங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. இதற்காகதனியே அழைப்பு கடிதங்கள் அனுப்பிவைக்கப்படமாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வுவாரிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment