ஐகோர்ட்டில் பூபால்சாமி என்ற மாணவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘‘என்ஜினீயரிங் படிப்பில் சேரும் போது நல்ல கல்லூரியை தேர்ந்து எடுப்பதில் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சதீஷ்குமார், அக்னி கோத்ரி, நீதிபதி ரவிச்சந்திர பாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘என்ஜினீயரிங் கல்லூரிகளின் தரவரிசை குறித்து ஆய்வு செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சத்தில் தனி கமிட்டி உள்ளது. இந்த ஆய்வு செய்யும் அதிகாரம் பல்கலைக்கழகத்திற்கு கிடையாது.
அதே நேரம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு என்ஜினீயரிங் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டு உள்ளோம். அவற்றின் அடிப்படையில் சிறந்த கல்லூரியை தேர்வு செய்து கொள்ளலாம்’’ என்று கூறி இருந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment