Skip to main content

"நேர்மையாக உழைத்து முன்னேற வேண்டும்"

தேர்வில் நேரம் போதாது என்பதற்கு கவனச் சிதறலே காரணம்; குறுக்கு வழியில் ஜெயிக்க நினைக்காமல், நேர்மையாக உழைத்து முன்னேற வேண்டும். குடும்பத்தினர், ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் உள்ளனர். அதை மனதில் நிறுத்தி படியுங்கள்; வாழ்வில் ஜெயிக்கலாம்" என, கல்வியாளர் ரமேஷ்பிரபா பேசினார்.

"தினமலர்" நாளிதழ் சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கான, "ஜெயித்துக்காட்டுவோம்" நிகழ்ச்சி சென்னை பல்கலை நூற்றாண்டு அரங்கில் நடந்தது. இதில், கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது:
"பிளஸ் 2 வாழ்வில் முக்கிய காலகட்டம். பிளஸ் 2 வந்ததும் நீங்கள் பரபரப்பானீர்களோ இல்லையோ, உங்களைச் சுற்றியுள்ளோர், "நீ பிளஸ் 2; இதில் தான், உன் எதிர்காலமே இருக்கிறது" எனக்கூறி பரபரப்பாகி விடுவர். நவம்பர் வந்ததும், தேர்வுக்கு மூன்று மாதமே இருப்பதால் லேசான படபடப்பு வந்து எப்படியும் படித்துவிடுவோம் என, வந்துள்ளீர்கள். இந்த தேர்வில், நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. தேர்வை அணுகும் விதத்தில் குளறுபடிகள் ஏற்பட்டால் பாதிப்பு வரலாம். இதில், கவனமாக இருக்க வேண்டும். ஐந்து ஆண்டு வினாத் தாள்களை எடுத்து ஆலோசிப்பது நல்லது.
இந்த ஆண்டில் இந்த கேள்வி கேட்டதால் இந்த முறை இந்த கேள்வி வரும், வராது என, அதை வைத்து ஜோதிடம் பார்க்கக்கூடாது. வினாத்தாளில் வேண்டாம் என விட்ட கேள்வி வந்தால், பதற்றம் வந்து படித்த 95 சதவீதமும் காலியாகிவிடும். தேர்வு மையத்திற்கு சீக்கிரம் செல்வது நல்லது. படித்த அதே நினைவுகளோடு தேர்வு எழுதச் சென்றால் வெற்றிகரமாக அமையும்.
நண்பர்களோடு, அதைப் படித்தாயா, இதைப்படித்தாயா என, ஆலோசிப்பது மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தலாம். தேர்வு நேரத்தை எப்படி சரியாக பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நம் எதிர்காலமே உள்ளது. நேரம் போதாது என்பதற்கு, கவனச்சிதறல் தான் காரணம். குறுக்கு வழியில் ஜெயிப்பது என்ற எண்ணம் கூடாது. நேர் வழியில், உழைத்து ஜெயிக்க வேண்டும்; அதுதான் சரியான அணுகுமுறை.
தேர்வு முடிவுக்காக உயிரை மாய்த்துக்கொள்வது; எதிர்பார்த்த மார்க் வரவில்லை என, தற்கொலை செய்து கொள்வது என்பதெல்லாம் கோழைத்தனம். விலை மதிப்பற்ற உயிரை, பேப்பருடன் ஒப்பிடக்கூடாது. தோற்றாலும் ஒரு மாதத்தில் மறு தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது என்ற, பக்குவம் வர வேண்டும். நீங்கள் நல்லவர்களாக இருக்க முயற்சித்தாலும் சினிமா போன்ற ஊடகங்கள் நீங்கள் திசை மாற காரணமாகிறது.
விடலைப் பருவம் எது சரி, தவறு என கணிக்க முடியாத வயது. இந்த காலகட்டத்தை பாதுகாப்பாக கடந்து விட்டால் வாழ்வில் ஜெயிப்பது எளிதாகிவிடும். எது காதல் என நினைக்கிறாயோ அது காதல் அல்ல; அது தோற்றம் சார்ந்தது. அறிவுக்கும், உணர்ச்சிக்கும் வித்தியாசம் உண்டு. இதை உணர வேண்டும்.
உங்களைச் சுற்றி உங்கள் குடும்பத்தினர் ஆயிரம், ஆயிரம் கனவுகளை சுமந்துள்ளனர். பல குடும்பங்களில் பொருளாதார சிக்கல் உள்ளது. படித்து, குடும்பத்தை மேம்படுத்துவாய் என நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த கனவுகளை மனதில் வைத்து நல்ல மதிப்பெண் அடுத்து பட்டப்படிப்பு; பட்ட மேற்படிப்பு; நல்ல வேலை; முதல் சம்பளத்தில், அம்மாவிற்கு சேலை; அப்பாவிற்கு முதல் வேட்டி வாங்கிக் கொடுக்க வேண்டும் என, நினையுங்கள்.
தவறான சிந்தனை வரும்போது என் குடும்பம், என் வீடு என்ற நினைப்பு வரட்டும். தனியாக இருப்பதை தவிர்த்து, அதன் ஒரு பகுதியை, நல்ல நண்பர்களோடும் மற்றொரு பகுதியை குடும்பத்தோடும் செலவிடுங்கள். வாழ்வில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்." இவ்வாறு, அவர் பேசினார்.
டி.வி.ஆர்., பதக்கம் பெற்ற மாணவிகள்
பிளஸ் 2 கலைப்பிரிவில் கடந்த ஆண்டில் திருவள்ளூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பூஜா எஸ் குமாரிக்கு "தினமலர்" நிறுவனர் டி.வி.ஆர்., உருவம் பொறித்த வெள்ளி பதக்கமும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய "திருப்பு முனைகள்" என்ற புத்தகத்தையும், கல்வியாளர் ரமேஷ் பிரபா வழங்கினார். சென்னை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற எஸ்.திவ்யா, இரண்டாமிடம் பெற்ற ஸ்ரீலட்சுமிக்கான வெள்ளி பதக்கம் மற்றும் பரிசு புத்தகத்தையும் அவரது பெற்றோர் பெற்றுக் கொண்டனர்.
காலை நேரத்தில் நடந்த அறிவியல் பிரிவு நிகழ்ச்சியின் போது வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ருதி, வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவன் சையத் சல்மானும் மேடையேறினர். நட்பு, தாய்மை குறித்தும் விளக்கம் அளித்தனர். இவர்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய, "அக்னிச் சிறகுகள்" புத்தகம் வழங்கப்பட்டது.
அதிகம் குவிந்த மாணவியர்
நேற்று மதியம் கலைப்பிரிவு மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. இதற்காக காலை 11;30 மணியில் இருந்து மாணவர்கள் அதிக அளவில் வந்து வெளியில் காத்திருந்தனர். மாணவர்களைக் காட்டிலும் மாணவியர் அதிகம் வந்தனர்.

 

Comments

Popular posts from this blog

TAMIL NADU DISTRICT WISE TAHSILDAR PHONE NUMBER:

உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் செல் எண்  TAMIL NADU  DISTRICT WISE  TAHSILDAR PHONE NUMBER PRINTOUT-CLICK HERE ============================================ 1 Chennai ********************** 1 Fort-Tandiarpet 94450 00484 2 Purasawakkam-Peramb9u4r 450 00485 3 Egmore-Nungambakkam94450 00486 4 Mylapore-Triplicane 94450 00487 5 Mambalam-Guindy 94450 00488 2 Tiruvallur ********************** 6 Ambattur 94450 00489 7 Ponneri 94450 00490 8 Gummudipoondi 94450 00491 9 Thiruthani 94450 00492 10 Pallipattu 94450 00493 11 Thiruvallur 94450 00494 12 Uthukottai 94450 00495 13 Poonamallee 94450 00496 3 Kancheepuram ********************** 14 Kancheepuram 94450 00497 15 Uthiramerur 94450 00498 16 Sriperumbudur 94450 00499 17 Chengalpattu 94450 00500 18 Thirkkalukunram 94450 00501 19 Tambaram 94450 00502 20 Madurantakam 94450 00503 21 Cheyyur 94450 00504 4 Vellore ********************** 22 Arcot 94450 00505 23 Valaja 94450 00506 24 Arakkonam 94450 00507 25 Vellore 94450 00508 26 Gudiyatham 94450 00509

இங்கு வெளியிடப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் போட்டித்தேர்வுக்கான பொதுத்தமிழுக்கான உத்தேசமான வினா - விடைகள். TNPSC ஆல் வெளியிடப்படும் விடைகளே முடிவானதாகும்.

தேர்வு நாள்: 14.06.2014 1. சரியாகப் பொருத்துக: நூலாசிரியர்  -  நூல் அ. சுரதா - 1.கொடிமுல்லை ஆ. முடியரசன் - 2.பள்ளிப்பறவைகள் இ. வாணிதாசன் - 3.எச்சில் இரவு ஈ. ஆலந்தூர் மோகனரங்கன் - 4.பூங்கொடி விடை: ஆ. 3 - 4 - 1 - 2 2. கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக்குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத்தேர்வு செய் விடை: அ. அன்மொழித்தொகை சேய்மைச்சுட்டு 3. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்   உயிரினும் ஓம்ப்பபடும் - இதில் பயின்று வரும் மோனைச்சொற்கள். விடை: அ. ஒழுக்கம் - ஒழுக்கம் 4. உடம்பார் அழியின் உயிரார் அழிவார்  - இச்செய்யுளில் வயின்று வரும் மோனை விடை: ஈ) பொழிப்புமோனை  5. மா முன் நிரையும் விள முன் நேரும் வருவது விடை: ஆ) இயற்சீர் வெண்டளை 6. பூவோடு சேர்ந்த நார்போல - உவமை உணர்த்தும் பொருள் விடை: இ) உயர்வு 7. நூலையும் நூலாசிரியரையும் பொருத்துக: அ. தி.ஜானகிராமன் - 1.சாயாவனம் ஆ. க.நா.சுப்பிரமணியன் - 2. செம்பருத்தி இ. சா.கந்தசாமி - 3 கரைந்த நிழல்கள் ஈ. அசோகமித்திரன் - 4. பெரியமனிதன் விடை: அ) 8. கற்பனைக்களஞ்சியம் என்று போற்றப்படுபவர் - விடை: ஈ) சிவப்பிரகாசசுவாமிகள் 9. சேரமான் பெருமா

நல்லாசிரியரின் நற்பண்புகள் யாவை?

வரவிருக்கும் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளைப் (செப்டம்பர் 5, ஆசிரியர் தினம்) பெருமைப்படுத்தும் விதத்தில் இக்கட்டுரை அமைகிறது. நன்னூல் கூறும் நல்லாசிரியர் பவணந்தியார், நன்னூலில் (நூற்.26-30) நல்ல ஆசிரியரின் பண்புகள், மாண்புகள் முதலியவற்றை விரிவாகவும் நுட்பமாகவும் தொகுத்துக் கூறியுள்ளார். ஆசிரியர், நிலம், மலை, நிறைகோல் (தராசு), மலர் போன்ற மாண்புடையவர் என்கிறார். 1. நிலத்தின் மாண்புகள்: நிலம் ஓரிடத்தில் நின்று அதை முழுவதும் பார்க்கவே முடியாதபடி பரப்பினால் பெருமையுடையது. எவ்வளவு பாரத்தையும் சுமக்கும் திடமுடையது. மனிதர்கள் அகழ்தல், பிளத்தல் முதலிய குற்றங்களைச் செய்தாலும், அவற்றைத் தாங்கிப் பொறுத்துக் கொள்ளும் பொறுமையுடையது. தக்க பருவதிலே உழவர்கள் செய்கின்ற உழவுத்தொழில் முயற்சிகளுக்குத் தகுந்தபடி அவர்களுக்குப் போதிய பலன்களைத் தரவல்லது. ஆசிரியரின் மாண்புகள்: தமது பரந்துபட்ட கல்வியறிவால் பெருமையுடையவர். தம்மிடம் வாதமிடுபவரைத் தாங்கும் திண்மை உடையவர். தம்மை இகழ்தல், எதிர்த்தல் போன்ற குற்றங்களையும் பொறுத்துக் கொள்பவர். தமது மாணவர்களுக்குத் தக்க பருவத்தில், தக்க அளவு, தகுந்த பயன்களைத