திருவள்ளூர் மாவட்டத்தில் டி.டி.மருத்துவ கல்லூரியைஏற்று நடத்த அரசு பரிசீலனை ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் தகவல்:
டி.டி.மருத்துவ கல்லூரியை ஏற்று நடத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக சென்னை ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் சோமயாஜி கூறினார். மாணவர்கள் வழக்குதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டி.டி.மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை இந்திய மருத்துவ கவுன்சில் வாபஸ் பெற்றது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த கல்லூரியில் படித்த மாணவர்கள், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘டி.டி. மருத்துவ கல்லூரியை தமிழக அரசே எடுத்து நடத்தவேண்டும்’ என்று கூறியிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டி.டி.மருத்துவ கல்லூரி மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்களை நீதிபதி கே.கே.சசிதரன் விசாரித்து, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து, கடந்த வாரம் உத்தரவிட்டார்.ஏற்று நடத்த பரிசீலனைஇந்த நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி கேட்டு கொண்டதை தொடர்ந்து, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அப்போது, அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி, ‘டி.டி.மருத்துவ கல்லூரியை தமிழக அரசு ஏற்று நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. ஒருவேளை இந்த ஐகோர்ட்டு, அந்த கல்லூரியை அரசு எடுத்து நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டால், அந்த உத்தரவை ஏற்று, கல்லூரியை எடுத்து நடத்தவும் தயாராக உள்ளது. அதேநேரம், டி.டி.மருத்துவ கல்லூரிக்குள்ள கடன் பொறுப்புக்களை ஏற்க முடியாது’ என்று கூறினார்.தீர்ப்பு தள்ளிவைப்பு இதையடுத்து டி.டி. மருத்துவ கல்லூரி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.பிரகாஷ், ‘கல்லூரி நிர்வாகத்தை அரசு எடுத்துக்கொள்வது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது’ என்று கூறினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் நளினி சிதம்பரம், ‘சுப்ரீம் கோர்ட்டில் அப்படி ஒரு வழக்கு நிலுவையில் இல்லை. அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு பைசல் செய்து விட்டது. அந்த உத்தரவில், கல்லூரியை அரசு ஏற்று நடத்துவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது’ என்று வாதம் செய்தார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Comments
Post a Comment