குரூப்2 தேர்வு நாள் மாற்றம் இல்லை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்:
குரூப்2 தேர்வு தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்தபடி 01.12.2013 அன்றே நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழ் நாடு அரசுப் பணியாளர்கள் தேவாணையம் அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 2 (தொகுதி-2) ல் உள்ளடங்கிய 1064 பதவிகளுக்கான அறிவிக்கையினை (எண் 14/2013) வெளியிட்டு அதற்கான முதனிலை எழுத்துத் தேர்வினை 01.12.2013 அன்று நடத்த திட்டமிட்டிருந்தது.ஆனால் அதே நாளில் (01.12.2013) வேறு சில தேர்வு வாரியம் / ஆணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளும் நடைபெற இருந்ததை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-2 தேர்வினை வேறு ஒரு நாளில் நடத்துமாறு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேற்படி கோரிக்கைகளை பரிசீலித்த தேர்வாணையம், தொகுதி-2 தேர்வுக்கு சுமார் 7 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு மேல் விண்ணப்பித்திருப்பதாலும், இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருவதாலும், அடுத்தடுத்து வரும் வார இறுதி நாட்களில் மற்ற தேர்வு வாரியம்/ஆணையங்களின் போட்டித் தேர்வுகள், துறைத் தேர்வுகள் இருப்பதனாலும், மேற்படி தேர்வினை விரைந்து முடித்து தேர்வு முடிவுகளை அறிவிக்கும் பொருட்டு இத்தேர்வினை தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்தபடி 01.12.2013 அன்றே நடத்த முடிவு செய்துள்ளது.
Comments
Post a Comment