10-ம் வகுப்பு நேரடித் தனித்தேர்வர்கள்: செய்முறை வகுப்புக்கு பதிவு செய்ய வாய்ப்பு:
பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை வகுப்புகளுக்குப் பதிவு செய்ய நேரடித் தனித்தேர்வர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.2013-14 ஆம் கல்வியாண்டில் நேரடியாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் அனைவரும் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு ஜூன் 3 முதல் 30-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதிக்குள் பதிவு செய்துகொள்ள தவறிய நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தனித்தேர்வர்கள், பதிவு செய்து பயிற்சி பெறாதவர்கள் ஆகியோர் தங்களது பெயர்களை அக்டோபர் 1 முதல் 15 வரை அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்காக பதிவு செய்யலாம்.
இந்த மாணவர்கள் http:dge.tn.gov.in. www.tndge.in என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். செய்முறைத் தேர்வுக்கான ரூ.125 கட்டணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலை (டி.டி.) எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
வரைவோலையை மாவட்ட கல்வி அலுவலர் என்ற பெயரில் எடுக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலகங்களை அணுகலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
Comments
Post a Comment