மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்:
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜுலை 5 ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம். பிபிடி, பி.எஸ்சி., ரேடியேஷன் டெக்னாலஜி, பிஒடி ஆகுபேஷனல் தெரபி உள்ளிட்ட மருத்துவம்
சார்ந்தப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள 18 அரசு மருத்துவக்கல்லூரிகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது.
பொதுப்பிரிவினர் 350 ரூபாய் செலுத்தியும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கள் சாதி சான்றிதழ் நகலை கொடுத்து இலவசமாகவும் விண்ணப்பங்களைப் பெறலாம்.
Comments
Post a Comment