பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற 9 பேரும் மாணவிகள். அவர்கள் 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். எஸ். அனுஷா
கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை தாயும் தந்தையும் தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து கல்லூரி ஊழியர்கள். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு. ‘‘அன்றைய பாடங்களை அன்றே படித்து எழுதிப் பார்த்து விடுவதுதான் எனது வெற்றிக்குக் காரணம்’’ என்கிறார் அனுஷா, மாநில அணி வாலிபால் பிளேயர். நரம்பியல் நிபுணராக ஆகவேண்டும் என்பது இவரது எதிர்கால லட்சியம்.
ஜே.பி.எம். தீப்தி
பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி, அண்ணாநகர், மதுரை. தாயும் தந்தையும் பள்ளி ஆசிரியர்கள். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ள தீப்தி, டியூஷன் சென்றதில்லை. ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை அன்றே படித்து முடித்து விடுவார். ஃபேஷன் டெக்னாலஜி படிக்க வேண்டும் என்பது அவரது எதிர்கால லட்சியம். எம். காயத்ரி
மான்ட் போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி. தந்தை பஸ் கண்டக்டர். தாய் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை. கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு. ‘‘அனைத்துப் பாடங்களையும் முழுமையாகப் படித்ததால்தான் மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடிந்தது’’ என்கிறார் காயத்ரி. இதய நோய் சிகிச்சை நிபுணராக உருவாக வேண்டும் என்பது இவரது எதிர்கால லட்சியம். டி. மார்சியா ஷெரீன்
மான்ட் போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி. தந்தை புள்ளியியல் துறை உதவி இயக்குநர். தாய், அரசு பள்ளி ஆசிரியை. ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு. ‘‘புத்தகத்திலுள்ள அனைத்தையும் படித்தால் போதும். நாம் பெற வேண்டிய மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம்’’ என்கிறார் மார்சியா. குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என்பது இவரது லட்சியம். கே.ஆர். பொன்சிவசங்கரி ஈரோடு இந்து கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு. விவசாயக் குடும்பம். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு. ‘‘நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்ததே எனது வெற்றிக்குக் காரணம்’’ என்கிறார் பொன் சிவசங்கரி. யு.கே.ஜி. படிக்கும் போதே பார்வைத் திறன் குறைந்ததால் கண்ணாடி அணிய வேண்டியதாகி விட்டது. கண் மருத்துவம் படித்து, கண் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் இவரது லட்சியம். சி.எஸ். சாருமதி சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பிரம்மபுரம், வேலூர். தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தாய் பள்ளிக்கூட ஆசிரியை. கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு. பள்ளியில் தினமும் நடத்தும் பாடங்களை அன்றே படித்து விடுவதாகக் கூறுகிறார் சாருமதி. சென்னை ஐஐடியில் படித்துவிட்டு, விண்வெளி விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது இவரது எதிர்கால லட்சியம். பி. சோனியா ஸ்ரீ ஜயேந்திர சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி. தந்தை சித்த மருத்தவர். தாய், அரசு மருத்துவக்கல்லூரி உதவிப் பேராசிரியர். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு. ‘‘திட்டமிட்டுப் படித்ததே வெற்றிக்குக் காரணம்’’ என்கிறார் சோனியா. ஐஐடியில் பொறியியல் பட்டப் படிப்புப் படிக்க வேண்டும் என்பது இவரது லட்சியம். ஆர். ஸ்ரீதுர்கா வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம். தந்தை அண்ணாமலை பல்கலைக்கழக முதுநிலை கண்காணிப்பாளர். தாய் இல்லத்தரசி. கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு. ‘‘பாடங்களை நடத்தும் போதே கூர்ந்து கவனிப்பேன். அத்துடன், தினமும் பாடங்களைப் படித்து விடுவதே எனது வெற்றிக்குக் காரணம்’’ என்கிறார் ஸ்ரீ துர்கா.கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பது இவரது லட்சியம். எஸ். வினுஷா
ஆக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வேலூர். தந்தை தனியார் நிறுவன ஊழியர். தாய், இல்லத்தரசி. கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு. இவர் டியூஷன் சென்றதில்லை. ‘‘அன்றாடம் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை அன்றன்றே படித்ததுதான் வெற்றிக்குக் காரணம்’’ என்கிறார் வினுஷா. ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்பது இவரது எதிர்கால லட்சியம்.
|
Comments
Post a Comment