10ஆம வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியீடு:
சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய 10-ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி, 27-ஆம் தேதி முடிவடைந்தது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 5,00,000 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் www.cbse.nic.in, www.results.nic.in, மற்றும் www.cbseresults.nic.in ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், 011 - 2430 0699 என்ற IVRS தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். கடந்த சில ஆண்டுகளாக, மதிப்பெண்கள் வழங்குவதற்குப் பதிலாக கிரேடு வழங்கும் முறையை பின்பற்றி வருகிறது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கான ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. இணையதளத்தில் காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறியலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது
Comments
Post a Comment