டிவி பார்ப்பதை தவிர்த்தால் தொழிலதிபர்களாகலாம்: பாரதிதாசன் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்:
உளுந்தூர்பேட்டை: 365 நாட்களுக்கு அலைபேசியை பயன்படுத்தாமல், கண்ணாடி, "டிவி" பார்ப்பதை தவிர்த்தாலே நீங்கள் தொழிலபதிர்களாக முடியும் என திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக சிண்டிகேட் உறுப்பினர் தங்கம்மூர்த்தி பேசினார்.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீவிநாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது:
மாணவர்கள் கல்வியறிவு பெறவேண்டும். கல்வியை ஏதோ படித்துவிட்டோம், முடிந்தது என்று பட்டம் வாங்கியதோடு இருந்துவிடக் கூடாது. படித்து கொண்டே இருக்கவேண்டும், அதற்கு வயது ஒரு தடையல்ல.
மாணவர்களாகிய நீங்கள் 365 நாட்கள் அலைபேசியில் பேசாமல், பயன்படுத்தாமல் இருக்கவேண்டும். உங்களுடைய முகம், உருவத்தை கண்ணாடியில் பார்க்காமல் இருக்கவேண்டும். "டிவி" பார்க்காமல் இருக்கவேண்டும். இந்த மூன்றையும் தவிர்த்தாலே நீங்கள் பெரும் தொழிலபதிர்களாக வரமுடியும்.
தன்னம்பிக்கை இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். நாம் காமராஜர், விவேகானந்தர், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட பல தலைவர்களை ஹீரோக்களாக நினைப்பதில்லை. அவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்.
பல தலைவர்கள் பல புத்தகங்களை ஆழந்து படித்து பெரிய அறிஞர்களாக உள்ளனர். ஆனால் தற்போது புத்தகங்களைவிட "பேஸ் புக்கில்" தான் ஆழ்ந்து இருக்கின்றனர். கணிணி அறிந்தவர்கள் தற்பொழுது ஆன்-லைனும், பெண்-டிரைவும் இல்லாமல் இருப்பதில்லை.
அது போல் மாணவர்கள் உங்கள் வாழ்க்கையை நீங்கள் உயர்த்தி கொள்ள கல்வியை சிறப்பான முறையில் கற்று கொள்ளவேண்டும். ஒரு லட்சியத்துடன் வாழவேண்டும். அந்த இலக்கை நோக்கி பயணிக்கவேண்டும். அப்போது மற்றவைகள் நமக்கு தானாகவே கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Comments
Post a Comment