தமிழக அரசின் இளநிலை உதவியாளர் பணிக்கான 563 பணி நாடுநர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் நான்கின் கீழ் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடூ பெறப்பட்ட இந்த பணியிடக் கலந்தாய்வு ஏப்ரல் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. போதுமான காலிப் பணியிடம் இல்லாததால், சொந்த மாவட்டங்களில் பணி கிடைக்காதவர்கள் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கும், பிற்பகலில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு பெறப்பட்ட தேர்வாளர்கள் அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு ஏப்ரல் 25-ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு தவறாமல் வருகை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment