சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., ஏப்ரல் 1ம் தேதி திறப்பு:
அண்ணாமலை பல்கலைக்கழகம் ஏப்ரல் ஒன்றாம் தேதி துவக்கப்படுகிறது.இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதனையடுத்து கடந்த 13ம் தேதி முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில், அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் கலை, அறிவியல், கடல்வாழ் உயிரினம், இந்திய மொழியியல், கல்வியியல், இசைத்துறை மற்றும் இன்ஜினியரிங் மாணவ மாணவியர்களுக்கு வகுப்புக்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கும் என்றும், வேளாண்மை மாணவ மாணவியர்களுக்கு மார்ச் 28ம் தேதி முதல் வகுப்புக்கள் துவக்கப்படும் என பல்கலை., பதிவாளர் மீனாட்சிசுந்தரம் அறிவித்துள்ளார்.
Comments
Post a Comment