கரன்ட் உண்டு; கட்டணம் இல்லை:முன்மாதிரி தொடக்கப் பள்ளி!
தொடர் மின்வெட்டால் தமிழகமே தத்தளிக்கும் நிலையில், திருவண்ணாமலையில் தொடக்கப்பள்ளி ஒன்று மின்சாரத்தில் தன்னிறைவு பெற்று விளங்குகிறது. முழுக்க முழுக்க சூரிய ஒளி மின்சாரத்தைக் கொண்டு இயங்கும் இப்பள்ளியின் முன்மாதிரி முயற்சி பாராட்டுக்குரியது.
திருவண்ணாமலை மாவட்டம் வேடியப்பனூரில் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் இப்பள்ளியில் எல் கே ஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது. பலமணி நேர மின்வெட்டால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதைக் கண்ட இப்பள்ளி நிர்வாகம், கடந்த 2009ம் ஆண்டே சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் வசதியை ஏற்படுத்திவிட்டது. பள்ளியின் மேல் தளத்தில் சூரிய ஒளி மின்தகடுகளை அமைத்து மின்சாரம் தயாரித்து அதனை பேட்டரிகளில் சேமித்து பயன்படுத்துகின்றனர். அனைத்து வகுப்புகளிலும் குழல் விளக்குகள், மின்விசிறிகள், கணினிகள், எல்.சி.டி., புரஜக்டர்கள், நீரிறைக்கும் மின் மோட்டார் போன்றவை அனைத்தும் சூரிய ஒளி மின்சாரத்தினால் இயங்குகின்றன.
சூரிய ஒளி மின்சாரம் தவிர, மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு இங்கு படிக்கும் 206 மாணவர்களுக்கும் விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ வகுப்புகள், அபாகஸ் பயிற்சி, இசைப் பயிற்சி என மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் அனைத்திற்கும் இங்கு இடம் உண்டு.
மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் முழுமையாக செய்து தரப்பட்டுள்ள இப்பள்ளியில் கட்டணமே கிடையாது என்பது ஆச்சர்யமான செய்தி.
அனைத்திற்கும் அரசாங்கத்தின் உதவிக்கரத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு மத்தியில் சுயசார்புடன் செயல்பட முயற்சிக்கும் இப்பள்ளி, அங்கு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, பிரச்னையில் சிக்கித் தவிக்கும் அனைவருக்குமே சிறந்த முன்மாதிரி என்பதில்
Comments
Post a Comment