CBSE பள்ளிகளில் மன அழுத்தத்தை போக்க உதவி மையம்:
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 1லிலும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 15லிலும் தொடங்குகிறது.இதனால் மாணவர்கள் தேர்வு பற்றிய மன அழுத்தம், உளவியல் பிரச்சனைக்கு ஆட்பட்டு இருப்பார்கள். இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம், 98118 96286 என்ற புதிய ஹெல்ப்லைனை தொடங்கியுள்ளது.
இந்த ஹெல்ப்லைன், இம்மாதம் இறுதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பாட்டில் இருக்கும். இந்த ஹெல்ப்லைனில், தேர்வுக்கு முன் மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம், தேர்வு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், பசியின்மை, தலைவலி, தேர்வு பயம் போன்ற அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது.
Comments
Post a Comment